சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இலங்கைக்கான முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்!

Date:

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இன்றைய தினம் அதிகாலை 1.20 மணியளவில் இலங்கை வந்துள்ளார்.

சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சரின் இருதரப்பு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இளவரசர் பைசலை இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் அல் ஹார்த்தி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இராச்சியத்தின் ஊழியர்கள் பலர் வரவேற்றனர்.

இதனிடையே இலங்கையில் நிலவும் எரிபொருள், பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவருடன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் 18 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய் வளம் மிக்க தேசத்தின் வெளியுறவு அமைச்சர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு (14) பின்னர் நேபாளம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...