சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இலங்கைக்கான முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்!

Date:

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இன்றைய தினம் அதிகாலை 1.20 மணியளவில் இலங்கை வந்துள்ளார்.

சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சரின் இருதரப்பு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இளவரசர் பைசலை இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் அல் ஹார்த்தி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இராச்சியத்தின் ஊழியர்கள் பலர் வரவேற்றனர்.

இதனிடையே இலங்கையில் நிலவும் எரிபொருள், பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவருடன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் 18 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய் வளம் மிக்க தேசத்தின் வெளியுறவு அமைச்சர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு (14) பின்னர் நேபாளம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...