ஜே.வி.பி ஆர்ப்பாட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்தனர்!

Date:

மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி) இணைந்த சோசலிச இளைஞர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் நுழைய விடாமல், விசேட அதிரடிப்படையினர் தடுத்துள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஆலையை விற்பனை செய்வதற்கும் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை விற்பனை செய்வதற்கும் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெக்னிக்கல் சந்தியிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்தது.

ஜனாதிபதி வரும் வரை போராட்டக்காரர்கள் வளாகத்திலேயே இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜே.வி.பி கட்சி மூன்று தினங்களுக்கு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை , எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமையன்று நுகேகொடையில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

இறுதிப் போராட்டம் விவசாயிகளால் எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொலன்னறுவையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...