மோடியால் பாராட்டப்பட்ட ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சைத் தூண்டுகிறதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், 1990களின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த இந்த திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை தூண்டியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்குவது போன்றும், இந்து-இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.
கடந்த வாரம் வெளியான 170 நிமிட ஹிந்தி மொழித் திரைப்படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, தனது காஷ்மீரி இந்துப் பெற்றோர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதைக் கண்டறியும் ஒரு மாணவனின் கற்பனைக் கதையைச் சொல்கிறது.
1989 இல் இந்திய ஆட்சிக்கு எதிராக ஒரு கிளர்ச்சி வெடித்தபோது நூறாயிரக்கணக்கானோர் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டனர், வீடுகளையும் பல உயிர்களையும் இழந்தனர். பலர் இந்துக்கள், ‘காஷ்மீரி பண்டிட்டுகள்’ என்று அழைக்கப்பட்டனர், பின்னர் வட இந்தியா முழுவதும் முகாம்களில் வாழ்ந்தனர்.
எவ்வாறாயினும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பள்ளத்தாக்கில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான சமூகம் தொடர்ந்து வாழ்கிறது.
இந்நிலையில், காஷ்மீரின் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட, இரத்தம் தோய்ந்த ஒரு பகுதியை இது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இந்தப் படத்தின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம், சம்பவங்களின் உண்மைத் தன்மையில் கவனக்குறைவுகள் இருப்பதாகவும், இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2014 ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மோடியின் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி இடம்பெயர்ந்த இந்துக்களுக்கு ஆதரவை வழங்கியது, அவர்கள் இறுதியில் இந்திய நிர்வாகத்தின் காஷ்மீருக்கு திரும்ப விரும்புகிறார்கள்.
சர்ச்சைக்குரிய பிராந்தியத்தின் சிறப்பு அந்தஸ்து 2019 இல் நீக்கப்பட்டதில் இருந்து, மோடியின் அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது பிராந்தியத்தின் மக்கள்தொகையை மாற்றுவதையும் அவர்களின் நிலத்தையும் வாழ்வாதாரங்களையும் கொள்ளையடிப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று உள்ளூர் முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
1980 களின் பிற்பகுதியில், இந்திய ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் காஷ்மீரில் ஆயுதக் கிளர்ச்சி உருவானது.
இந்தநிலையில், இஸ்லாமியவாத போராளிக் குழுக்கள் 1990களில் சிறுபான்மையினராக இருந்த காஷ்மீரி இந்துக்களை – அதாவது உயர்சாதி பண்டிட்களை – குறிவைக்கத் தொடங்கினர்.
இதன் விளைவாக, பலர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதில் பலர் வீடு திரும்பவே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளனர்.
பாஜக ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப்படத்தை பார்ப்பதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல்துறைக்கு ஒரு நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்கள் படத்தை இழிவுபடுத்துவதற்கான சதி’ என்று இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
முதல் பிரச்னையாக, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.