தேசிய பொருளாதார சபைக்கு உதவும் ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமனம்!

Date:

தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் மேலும் இரு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி அசோக பத்திரகே மற்றும் மொஹான் பண்டிதகே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு புதிய உறுப்பினர்களுடன் தேசிய பொருளாதார கவுன்சிலுக்கு உதவ நியமிக்கப்பட்ட குழுவில் 16 பேர் உள்ளனர்.

நேற்றையதினம், தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நேற்றையதினம், இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக, 01. பேராசிரியர் எச்.டி கருணாரத்ன, 02.பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த, 03. கலாநிதி துஷ்னி வீரகோன், 04. தம்மிக்க பெரேரா, 05. கிரிஷான் பாலேந்திர, 06. அஷ்ரப் உமர், 07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, 08. விஷ் கோவிந்தசாமி, 09. எஸ்.ரங்கநாதன், 10. ரஞ்சித் பேஜ் 11. சுரேஷ் டி மெல், 12. பிரபாத் சுபசிங்க, 13. துமிந்த ஹுலங்கமுவ, 14. சுஜீவ முதலிகே. தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...