நாட்டில், மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படலாம்!

Date:

எதிர்வரும் வாரம் மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தினால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்காததால் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையம் அதன் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

அதேநேரம், டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அனல் மின்நிலையங்களுக்கு போதுமான எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே தினசரி 6 மணி நேரம் மின்சாரம் தடைபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...