நாளை 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்!

Date:

இலங்கை முழுவதும் நாளையதினம் (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி காலை ஐந்து மணி நேரம் மாலை 2 மணி 30 நிமிடங்களுக்கு என மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமை காரணமாக மின்சாரம் தடைப்படுகின்றது.

அதன்படி, E, T, U, V, W ஆகிய வலயங்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 5 மணி நேரமும் F, P, Q, R, S வலயங்களுக்கும் மதியம் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும் E, T, U, V, W ஆகிய வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை இரண்டரை மணி நேரமும் F, P, Q, R, S ஆகிய பகுதிகளில் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

E-02-03-2022-Power-Interruption-Schedule

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...