பலஸ்தீனின் ‘பூமி’ தினத்தை முன்னிட்டு கொழும்பில் கண்காட்சி!

Date:

பலஸ்தீனின் ‘பூமி’ தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற கண்காட்சி நிகழ்விற்கான ஆரம்ப நிகழ்வு இன்று பலஸ்தீனின் தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, சுரேன் ராகவன் மற்றும் பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். செய்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை 29,30,31 ஆகிய தினங்களில் பலஸ்தீன்- இலங்கைக்கு இடையிலே உள்ள நல்லுறவு தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

1948ஆம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

மற்றொரு பிரதேசம் போராடி தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். மற்றொன்று பாலஸ்தீனம்.

மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டுவருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் ‘ஒப்சர்வர் ஸ்டேட்’ என்கிற அந்தஸ்தைப் பெற்றது.

இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்துவருகின்றனர். மேற்குக் கரை,காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...