‘பாணின் விலையை நூறு ரூபா வரையில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்’

Date:

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் முடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையால் ஒரு இறாத்தல் பாணின் விலையை நூறு ரூபா வரையில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் காலங்களில் மேலும் பல பேக்கரிகளை மூடும் நிலை உருவாகும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது சந்தித்துவரும் பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பேக்கரி உற்பத்தித் தொழிலும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்குத் தேவையான கோதுமை மா, முட்டை, பாம் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளது.

எனவே, இந்த அசாதாரண சூழல் தொடருமாயின், நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் மூடப்படும் சூழ்நிலையும் விலையை அதிகரிக்கவும் நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுமுழுவதும் இரண்டில் ஒருபகுதியளவான எமது நடமாடும் சிற்றுண்டி வண்டிகளின் எண்ணிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...