‘பாராளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது’: உதய கம்மன்பில

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினராக இருந்து பாராளுமன்றத்தில் பேசும் உரிமை மறுக்கப்பட்டது தவறானது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கட்சியின் நெறிமுறைகள் தற்போது சமரசம் செய்யப்பட்டு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கின்றன எனவும் அசர் தெரிவித்தார்.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது உரையை ஆற்றுவதற்கு கால அவகாசம் கோரி எழுத்துமூலமான கோரிக்கையை திங்கட்கிழமை (07) முன்வைத்திருந்தார்.

எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்தார்.

‘இன்று பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சபையில் பேசும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் நான் எடுத்துரைத்த போது, அவர் இது தொடர்பில் ஆராய்வதாக என்னிடம் தெரிவித்தார்.

சிறிது நேரம் கழித்து, அவருடைய அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்து, இன்றைக்கு பேச்சுப் பட்டியலில் என்னையும் சேர்க்க முடியவில்லை என்று சொன்னார்.

கடந்த வாரம் வரை எரிசக்தி அமைச்சராக இருந்த எனக்கு இந்நாட்டு மக்கள் 1,36,331 பேர் எனக்கு வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் பேசுவதற்கான எனது உரிமையை மறுப்பது என்பது எனது வாக்காளர்கள் தங்கள் இதயங்களையும் மனதையும் வெளிப்படுத்தும் உரிமையை மறுப்பதாகும்,’ என்று அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்றத்தில் பேசும் உரிமையை சபாநாயகர் பாதுகாப்பார் என மரியாதையுடன் எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

கம்மன்பில பேசும் உரிமையை மறுப்பது அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்கள் மீது கட்சி கொண்டுள்ள நெறிமுறைகள், கொள்கைகள் மற்றும் நன்றியின் பிரதிபலிப்பாகும் என கம்மன்பில தெரிவித்தார்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...