பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை: எரிசக்தி அமைச்சர்

Date:

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு , இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது .

இதற்கிடையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்கும் நிலை தொடர்கின்றது . இதேவேளை ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே விளக்கமளிக்கையில்,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகள் தற்போதைய நிலையில் அதிகரிக்கப்படாது என தெரிவித்துள்ளார் .

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு , இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது .

இதற்கிடையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்கும் நிலை தொடர்வதுடன் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே விளக்கமளிக்கையில்,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய எண்ணெயின் துணை நிறுவனமான லங்கா ஐ.ஓ.சி, இந்த ஆண்டில் மட்டும் நான்காவது முறையாக அனைத்து வகை பெற்றோல்களின் விலையை உயர்த்தியதையடுத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் டொலர் நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வினால் ஏற்பட்ட தேவையற்ற நிலைமைகள் காரணமாக பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளதுடன்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...