போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கிம்புலா’ எலே குணாவின் பிரதான உதவியாளர் கைது!

Date:

பல  குற்றங்கள் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எலே குணாவின் பிரதான உதவியாளர் மற்றும் தோழருமான ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (28) பிற்பகல் புளூமெண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெடிபானா எல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்தேகநபரிடம் 13 கிராம் ஹெரோயின், 01 கிராம் ஐஸ், 22 கிராம் கேரள கஞ்சா மற்றும் 160 “PREGA TABLETS” எனும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 150,200 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொழும்பு 15, அளுத் மாவத்தையில் வசிக்கும் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...