‘ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க எந்த தீர்மானமும் இல்லை’: பொதுஜன பெரமுன!

Date:

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுன தெளிவுபடுத்திய போதே அவர் இதனை கூறினார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமளவிற்கு தமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது என நினைப்பதாக கூறியுள்ளார்.

நேற்றையதினம் சிங்கள நாளிதழ் ஒன்றில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவிருப்பதாக வெளியான செய்தியினையடுத்து இந்த செய்தி சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...