2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டியில், இலங்கையின் மொஹமட் இர்ஷாத்

Date:

தேசிய ஸ்னூக்கர் சம்பியனான மொஹமட் தாஹா இர்ஷாத் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இலங்கையில் இருந்து பெற்றிருக்கார்.

இந்த ஆண்டின் ஜுலை மாதம் 7 ஆம் திகதி தொடக்கம், 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த ஸ்னூக்கர் விளையாட்டுப்போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இர்ஷாத் தாஹா கட்டாரில் ஒழுங்கு செய்யப்பட்ட (Billiard) உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் மூலம் பெற்றிருந்தார்.

கனிஷ்ட சிரேஷ்ட பிரிவுகளில் இலங்கையின் ஸ்னூக்கர் மற்றும் பில்லியார்ட் சம்பியனாக காணப்படுகின்ற இர்ஷாத் கட்டாரில் நடைபெற்றிருந்த 21 வயதின் கீழ்ப்பட்ட போட்டியாளர்களான உலக ஸ்னூக்கர் சம்பியன்ஷிப் தொடரிலும் அடுத்தடுத்த வெற்றிகளுடன் இலங்கையின் நாமத்தினை உலகறியச் செய்திருந்தார்.

இதேவேளை இலங்கை, தாய்லாந்து, ஈரான் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சிரியா, ஜேர்மனி மற்றும் கட்டார் போன்ற முன்னணி நாடுகுளின் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...