2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டியில், இலங்கையின் மொஹமட் இர்ஷாத்

Date:

தேசிய ஸ்னூக்கர் சம்பியனான மொஹமட் தாஹா இர்ஷாத் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இலங்கையில் இருந்து பெற்றிருக்கார்.

இந்த ஆண்டின் ஜுலை மாதம் 7 ஆம் திகதி தொடக்கம், 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த ஸ்னூக்கர் விளையாட்டுப்போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இர்ஷாத் தாஹா கட்டாரில் ஒழுங்கு செய்யப்பட்ட (Billiard) உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் மூலம் பெற்றிருந்தார்.

கனிஷ்ட சிரேஷ்ட பிரிவுகளில் இலங்கையின் ஸ்னூக்கர் மற்றும் பில்லியார்ட் சம்பியனாக காணப்படுகின்ற இர்ஷாத் கட்டாரில் நடைபெற்றிருந்த 21 வயதின் கீழ்ப்பட்ட போட்டியாளர்களான உலக ஸ்னூக்கர் சம்பியன்ஷிப் தொடரிலும் அடுத்தடுத்த வெற்றிகளுடன் இலங்கையின் நாமத்தினை உலகறியச் செய்திருந்தார்.

இதேவேளை இலங்கை, தாய்லாந்து, ஈரான் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சிரியா, ஜேர்மனி மற்றும் கட்டார் போன்ற முன்னணி நாடுகுளின் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...