அசெளகரியங்களை எதிர்நோக்கும் முச்சக்கரவண்டி சாரதிகள்!

Date:

இலங்கை பெட்றோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் அதேவேளையில், IOC பெட்றோல் நிரப்பு நிலையங்களில் பெட்றோல் விலை அதிகரித்துள்ளமையினால் தாம் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக முச்சக்கரவண்டி சாரதிகள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் கபில கலபிட்டிகே தெரிவிக்கின்றார்.

பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால் தாம் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும் பெருமளவான நிவாரணங்களை வழங்குவதாக உறுதி வழங்கி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம், இன்று மக்களின் வயிற்றில் அடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான பிரச்சினை தொடருமாக இருந்தால், எதிர்காலத்தில் தாம் மேலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...