கல்பிட்டியில் எரிபொருளை வீணடிக்கும் செயலான சைக்கிள் மற்றும் வாகன பேரணி – தொடர்பாக பதிலளித்த நாமல்!

Date:

NEWSNOW |- கொழும்பு – புத்தளம் வீதியில் நேற்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – வாகன பேரணியின் பின்னணியில் தாம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

“இன்று கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிள் – வாகன பேரணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களால் எந்த உதவியும் செய்யப்படவில்லை. விளையாட்டு அமைச்சுடன் தொடர்பில்லாத தனியார் நிறுவனத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என விளையாட்டுத்துறை அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியானது, நாட்டின் நிலைமைய கருத்தில் கொள்ளாமல், அபாயகரமான வாகனங்களை ஓட்டியதாகவும், எரிபொருளை வீணடிப்பதாகவும் குற்றம் சுமத்தி பொதுமக்களின் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டது.

மேலும் இது ஒரு தொண்டு நிறுவனத்தின் நன்கொடையின் ஒரு பகுதியாக இந்த பேரணியை ஏற்பாடு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...