‘டீசலுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம்’: பெற்றோலிய கூட்டுதாபனம் கோரிக்கை

Date:

இன்றும் நாளையதினமும் (மார்ச் 31) டீசல் போதுமானளவு கையிருப்பில் இல்லாததனால் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் தலைவர் சுமித் விஜேசிங்கவின் கூற்றுப்படி, நேற்று (மார்ச் 29) மாலை திட்டமிடப்பட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசல் ஏற்றுமதிக்கான இறக்கும் பணி திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கான டீசல் விநியோகம் தடையின்றி தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெட்ரோல் விநியோகம் வழமைப் போன்று எவ்வித தட்டுப்பாடும் இன்றி தொடரும் என அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எனினும். எரிபொருள் நிலையங்களில் அதிகமான மக்கள் வரிசைகளில் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளதுடன் எரிபொருள் விரைவாக முடிந்து விடுவதாகவும் வாகன சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...