‘நாடு நாசம்- நாட்டைக் காப்போம்’: அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம்!

Date:

(File Photo)

எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு பேரணியொன்றுக்கு தயராகியுள்ளது.

அதேநேரம், இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி செல்லவுள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையம் மற்றும் கொழும்பு பொது நூலகத்திற்கு முன்பாக பிற்பகல் 1 மணிக்கு பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து பலர் இன்று கொழும்புக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த பேரணி இடம்பெறவுள்ளது.

‘நாடு நாசம்- நாட்டைக் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதுடன் இதில் நாடு முழுவதும் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் தொடர்பாகவும் இந்த போராட்டத்தில் முக்கியத்துவமளிக்கப்படுகின்றது.

அதேநேரம், குறித்த போராட்டம் அரசாங்கத்தை வீட்டுகு அனுப்பும் போராட்டமாக இருக்கவேண்டும் என்றும் இதில் கட்சிப்பேதமின்றி கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடத்தை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...