நாட்டில், மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படலாம்!

Date:

எதிர்வரும் வாரம் மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தினால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்காததால் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையம் அதன் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

அதேநேரம், டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அனல் மின்நிலையங்களுக்கு போதுமான எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே தினசரி 6 மணி நேரம் மின்சாரம் தடைபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...