நாட்டில், மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படலாம்!

Date:

எதிர்வரும் வாரம் மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தினால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்காததால் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையம் அதன் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

அதேநேரம், டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அனல் மின்நிலையங்களுக்கு போதுமான எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே தினசரி 6 மணி நேரம் மின்சாரம் தடைபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...