பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் கையெழுத்து போராட்டத்தில் இணைந்தார் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா !

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கையெழுத்திட்டுள்ளார்.

நேற்றையதினம், மாத்தறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நாடு தழுவிய கையொப்ப பிரச்சாரத்தில் இணைந்து கொண்டார்.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி அனைவருக்கும் நீதி வழங்கும் போராட்டம் நேற்று காலி மற்றும் மாத்தறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் வாழும் போது, இதுபோன்ற நிகழ்வுகளின் செய்திகள், எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஒரு நாள் இந்த சவால்களை முறியடிப்போம் என்ற நம்பிக்கையை அளித்தன என ஹிஜாஸ்புல்லா தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் யையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...