பயங்கரவாத தடைச்சட்ட தற்காலிக திருத்தச்சட்ட மூலம் அதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Date:

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்பில் 51 மேலதிக வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமுலத்திற்கு ஆதரவாக 86 பேர் வாக்களித்தனர், 35 பேர் இலங்கைக்கு எதிராக 35 பேர் வாக்களித்தனர்.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின்போது திருத்தத்துக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 35 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து குழுநிலை அமர்வின்போது திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார். கொண்டு வரப்பட்ட திருத்தம் போதுமானதல்ல, அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச்செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையில் திருத்தத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வாக்கெடுப்பை கோரின.
இதனையடுத்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...

விமல் வீரவன்ச கைது

இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த...