‘பாணின் விலையை நூறு ரூபா வரையில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்’

Date:

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் முடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையால் ஒரு இறாத்தல் பாணின் விலையை நூறு ரூபா வரையில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் காலங்களில் மேலும் பல பேக்கரிகளை மூடும் நிலை உருவாகும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது சந்தித்துவரும் பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பேக்கரி உற்பத்தித் தொழிலும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்குத் தேவையான கோதுமை மா, முட்டை, பாம் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளது.

எனவே, இந்த அசாதாரண சூழல் தொடருமாயின், நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் மூடப்படும் சூழ்நிலையும் விலையை அதிகரிக்கவும் நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுமுழுவதும் இரண்டில் ஒருபகுதியளவான எமது நடமாடும் சிற்றுண்டி வண்டிகளின் எண்ணிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...