‘பாராளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது’: உதய கம்மன்பில

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினராக இருந்து பாராளுமன்றத்தில் பேசும் உரிமை மறுக்கப்பட்டது தவறானது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கட்சியின் நெறிமுறைகள் தற்போது சமரசம் செய்யப்பட்டு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கின்றன எனவும் அசர் தெரிவித்தார்.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது உரையை ஆற்றுவதற்கு கால அவகாசம் கோரி எழுத்துமூலமான கோரிக்கையை திங்கட்கிழமை (07) முன்வைத்திருந்தார்.

எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்தார்.

‘இன்று பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சபையில் பேசும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் நான் எடுத்துரைத்த போது, அவர் இது தொடர்பில் ஆராய்வதாக என்னிடம் தெரிவித்தார்.

சிறிது நேரம் கழித்து, அவருடைய அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்து, இன்றைக்கு பேச்சுப் பட்டியலில் என்னையும் சேர்க்க முடியவில்லை என்று சொன்னார்.

கடந்த வாரம் வரை எரிசக்தி அமைச்சராக இருந்த எனக்கு இந்நாட்டு மக்கள் 1,36,331 பேர் எனக்கு வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் பேசுவதற்கான எனது உரிமையை மறுப்பது என்பது எனது வாக்காளர்கள் தங்கள் இதயங்களையும் மனதையும் வெளிப்படுத்தும் உரிமையை மறுப்பதாகும்,’ என்று அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்றத்தில் பேசும் உரிமையை சபாநாயகர் பாதுகாப்பார் என மரியாதையுடன் எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

கம்மன்பில பேசும் உரிமையை மறுப்பது அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்கள் மீது கட்சி கொண்டுள்ள நெறிமுறைகள், கொள்கைகள் மற்றும் நன்றியின் பிரதிபலிப்பாகும் என கம்மன்பில தெரிவித்தார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...