‘அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும்’

Date:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 125 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் 11 கட்சி குழு மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பத்து சுயேட்சை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் இன்று என்ன செய்வார்கள் என்பதை நாடு எதிர்ப்பார்த்திருப்பதாகவும், அசோக அபேசிங்க மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...