‘அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு!

Date:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சமகி ஜன பலவேகய குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் பதவி நீக்கப் பிரேரணை தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

இதேவேளை” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். கட்சி மட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடிலின் பின்னர் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...