ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, பாராளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது!

Date:

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 வருடங்கள் கடந்துள்ளள நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோளுக்கு இணங்க உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சரி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் இன்று (21) 1.30 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை ஆரம்பித்த போது அறிவித்தார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் கூறினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...