ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, பாராளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது!

Date:

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 வருடங்கள் கடந்துள்ளள நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோளுக்கு இணங்க உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சரி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் இன்று (21) 1.30 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை ஆரம்பித்த போது அறிவித்தார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...