ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியிலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான மக்கள் : உணவின்றி தவிப்பதாகக் கூறி வீதிக்கு இறங்கிய மஹரகம மக்கள்

Date:

திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் தாம் உணவின்றி தவிப்பதாகக் கூறி மஹரகம பொமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘மக்கள் வேடிக்கைக்காக ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள், மக்கள் வாழ வழி இல்லை, அதுதான் அவர்களை வீதிக்கு கொண்டுவருகிறது டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் பேரணியாக செல்கின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தயிினர் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர்.

இதேவேளை கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு அண்மையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா, நளின் பண்டார, கபிர் காசிம், ஹக்கீம், முஜீப்பு ரகுமான், ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், மனுச நாணயக்கார, ரஞ்சித் மத்துமபண்டார, வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரி வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...