‘எரிவாயு விநியோகச் சங்கிலியில் சிக்கல் உள்ளது’ : லிட்ரோ எரிவாயு நிறுவனம்

Date:

உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25 ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘எங்களுக்கு எரிவாயு விநியோகத்தில் சிக்கல் உள்ளது. இருப்பினும், நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறை ஓரிரு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும்’ என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஏப்ரல் 12 முதல் வணிக நோக்கங்களுக்காக லிட்ரோ எரிவாயு விநியோகம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் எரிவாயு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் உடனடியாக அதன் பிறகு, நிறுவனம் விநியோகத்தை மீண்டும் தொடங்கும் நிலையில் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...