‘எரிவாயு விநியோகச் சங்கிலியில் சிக்கல் உள்ளது’ : லிட்ரோ எரிவாயு நிறுவனம்

Date:

உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25 ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘எங்களுக்கு எரிவாயு விநியோகத்தில் சிக்கல் உள்ளது. இருப்பினும், நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறை ஓரிரு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும்’ என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஏப்ரல் 12 முதல் வணிக நோக்கங்களுக்காக லிட்ரோ எரிவாயு விநியோகம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் எரிவாயு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் உடனடியாக அதன் பிறகு, நிறுவனம் விநியோகத்தை மீண்டும் தொடங்கும் நிலையில் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...