‘எரிவாயு விநியோகச் சங்கிலியில் சிக்கல் உள்ளது’ : லிட்ரோ எரிவாயு நிறுவனம்

Date:

உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25 ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘எங்களுக்கு எரிவாயு விநியோகத்தில் சிக்கல் உள்ளது. இருப்பினும், நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறை ஓரிரு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும்’ என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஏப்ரல் 12 முதல் வணிக நோக்கங்களுக்காக லிட்ரோ எரிவாயு விநியோகம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் எரிவாயு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் உடனடியாக அதன் பிறகு, நிறுவனம் விநியோகத்தை மீண்டும் தொடங்கும் நிலையில் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...