காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

Date:

காலி முகத்திடல் மைதானத்தில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தில் விசேட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கலந்துகொண்டார்.

பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரி சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இச்சம்பவம் ஒழுக்கமான சேவையான இலங்கை பொலிஸாரை கடுமையாக இழிவுபடுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீருடையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி போராட்டக்காரர்களுடன் சேர்ந்து போராட்டத்ரத முன்னெடுப்பது போன்ற வீடியோக்கள் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டன.

பொலிஸ் அதிகாரி கொழும்பு கோட்டை பொலிஸாரால் வியாழக்கிழமை (ஏப்ரல் 14) கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...