தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி விளக்கம்!

Date:

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் புத்தசாசன புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் (24) காலை பிரதம பீடாதிபதிகளிடம் கையளிக்கப்பட்டது.

எனினும், அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் இன்னும் வெளியாகவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்ப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைத்திருந்தனர்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பிரேரணையை கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...