அனைவரையும் வியக்கவைத்த 6 வயது சிறுமியின் அற்புதமான குர்ஆன் பாராயணம்

Date:

இலங்கையை சேர்ந்த 6 வயது சிறுமியொருவர் அல் குர்ஆனின் வசனங்களை மிகத்தெளிவாக மனனம் செய்து பாராயணம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சியொன்றில் இடம்பெறும் போட்டி நிகழ்விலே அவர் இவ்வாறு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஹிஸ்மி ஹாஜி இஸ்மாயில் என்ற 6 வயது சிறுமி குர் ஆனின் வசனங்களை மிகத்தெளிவான முறையில் மனனம் செய்து ஓதியுள்ளார்.

இந்நிலையில் குறித்த போட்டி நிகழ்வில் நடுவராக இருந்த இஸ்லாமிய அறிஞர் குழாம் சிறுமியை பாராட்டியுள்ளார்கள்.

இதன்போது, இந்த சிறுமி குர்ஆன் ஓதும் அழகை பாராட்டமால் இருக்க முடியாது, ஆச்சரியமாகவுள்ளது அதேசமயம் இவரது திறமையை கண்டு அதிர்ச்சியாகவுமுள்ளது. எந்த விதமான எழுத்து பிழைகளுமின்றி உச்சரிப்பு பிழையுமின்றி 100 வீதம் மிகச் சரியாக ஓதியுள்ளார் எனவும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

இதேவேளை ரமழான் மாதம் என்பது முஸ்லிம்களுடைய மிக முக்கிய மாதங்களில் ஒன்றாகும். எனவே இந்த மாதத்தில் தான் இறை மறை குர்ஆன் நூல் இறக்கியருளப்பட்டதாக முஸ்லிம்களால் நம்பப்படுகின்றது.

இந்த இறைமறை குர்ஆனின் போதனைகள் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களால் மனதிலே இருக்கும் நிலையில், குறித்த சிறுமி மிகத்தெளிவாக மனப்பாடம் செய்து ஓதியமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

அரசாங்க அதிகாரிகள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை!

கொரோனா -19 தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத்...

பொருளாதார மீட்சிக்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஜனாதிபதி

பொருளாதார மீட்சிக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என...

மாகாண மட்டத்தில் மருத்துவமனைகளில் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல்...

விசா நடைமுறை குறித்து COPF குழுவில் விவாதம்!

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்...