நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் புத்தசாசன புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் (24) காலை பிரதம பீடாதிபதிகளிடம் கையளிக்கப்பட்டது.
எனினும், அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் இன்னும் வெளியாகவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்ப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைத்திருந்தனர்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பிரேரணையை கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தனர்.