ஈரான் ஜனாதிபதி உயிருடன் இருப்பதற்கான அறிகுறி இல்லை’: அரச ஊடகம் தகவல்

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் மீண்டு வருவதற்கான “அடையாளம் எதுவும் இல்லை” என்று அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி, குறித்த விபத்தில் ஹெலிகாப்டர் “முற்றிலும் எரிந்துவிட்டது” என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த நிலையில் விபத்துக்குள்ளாக ஹெலிகாப்டரை மீட்புக் குழுக்கள் கண்டுபிடித்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், ஜனாதிபதியும் அவரது சகாக்களும் உயிர் பிழைத்தார்களா இல்லையா என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.

ஆனால் அங்கு நிலைமை “சரியில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...