ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக இருக்கும் என புளோரிடாவின் அமெரிக்க செனட்டர் றிக் ஸ்கொற் (Rick Scott) தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலி ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் நீண்ட காலமாக பகை இருந்தது வருகின்றது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இந்நிலையிலேயே, ஹெலிகாப்டர் விபத்தில் பலி ஈரான் ஜனாதிபதி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து றிக் ஸ்கொற் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஈரான் ஜனாதிபதி ஒரு கொடுங்கோலன், அவர் நேசிக்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை.

அவர் உயிரிழந்துவிட்டால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...