நாளை (25) மற்றும் செவ்வாய்க்கிழமை (26) மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து நாளைய மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,S,T,U,V and W ஆகிய இரண்டு இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
நிலவும் மின்வெட்டு காரணமாக மின் நுகர்வோர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.