தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் மக்கள் பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது!

Date:

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் பேரணி இன்று மூன்றாவது இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த மக்கள் பேரணி பேருவளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் கொழும்பை வந்தடையவுள்ளது.

நேற்று வாதுவையில் ஆரம்பமாகி மொரட்டுவை நோக்கி வந்த பேரணி காலி – கொழும்பு நகர மண்டபத்திற்கு வந்து நிறைவடையவுள்ளது.

தற்போதைய ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரியும் மக்கள் நேய ஆட்சி ஒன்றை நாட்டில் ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் பேருவளை நகரிலிருந்து இந்த மக்கள் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் இந்த மக்கள் பேரணியின் கலந்துகொண்டனர்.

தற்போது காணப்படும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடித்து, மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம் என்ற அடிப்படிடையில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...