நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை!

Date:

நாட்டில் இடம்பெறும் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டங்களின் போது, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அந்த சம்பவங்களின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த பிறகே மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நேற்றைய தினம் இடம்பெற்ற பல போராட்டங்களில் தீ வைப்பு, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமை, பாதுக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் உள்நுழைந்தமை போன்ற பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களுக்கு உரிமை இருந்தாலும் அவர்கள் கட்டுக்கடங்காத வகையில் நடந்துகொள்ள முடியாது என்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப்பிரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

Popular

More like this
Related

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (17) காலை 8 மணி முதல்...

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை...

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...