பிள்ளையான், வியாழேந்திரன், முஷாரப் அமைச்சர்களாக பதவியேற்பு!

Date:

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இன்று ஜனாதிபதி மாளிகையில் இந்தப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

அதற்கமைய அவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.

அதேநேரம், எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் பக்கம் சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான முஷாரப் எம்.பியும் இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்றுள்ளார்.

அவர் நெசவுத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
மேலும் வியாழேந்திரன், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுளார்.

ஏற்கனவே நேற்றையதினம் 22 பேருக்கு இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...