பிள்ளையான், வியாழேந்திரன், முஷாரப் அமைச்சர்களாக பதவியேற்பு!

Date:

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இன்று ஜனாதிபதி மாளிகையில் இந்தப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

அதற்கமைய அவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.

அதேநேரம், எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் பக்கம் சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான முஷாரப் எம்.பியும் இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்றுள்ளார்.

அவர் நெசவுத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
மேலும் வியாழேந்திரன், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுளார்.

ஏற்கனவே நேற்றையதினம் 22 பேருக்கு இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...