புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க தயாராக உள்ளது!

Date:

புதிய அமைச்சரவை இன்று (18) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையில் சுமார் 20 பேர் அங்கம் வகிக்கவுள்ளதாகவும் சுமார் 10 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அலி சபேர், பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர்களான டொக்டர் ரமேஷ் பத்திரன, டக்ளஸ் தேவானந்தா, திலும் அமுனுகம ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

அரசாங்கத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட அமைச்சரவை கடந்த 3ஆம் திகதி இராஜினாமா செய்தது.

ஆனால் அடுத்த நாள், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் வழமையான பணிகளை மேற்கொள்வதற்கு மூன்று அமைச்சர்களை மட்டுமே ஜனாதிபதி நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...