மருந்து கொள்முதல் செய்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயார்!

Date:

அத்தியாவசிய மருந்துகள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான அவசர உதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி தயாராக உள்ளது.

நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கங்கள் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர்.

மற்றும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு அவசர உதவியை வழங்க தயாராக உள்ளனர் என்று உலக வங்கியின் தெற்காசியாவின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...