‘ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’: கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

Date:

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவத்து வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பு பொரளை பிஷப் ஹவுஸில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றையதினம் இடம்பெற்ற ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மக்களுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் 2013 இல் இடம்பெற்ற ரத்துபஸ்வெல குடிநீர் போராட்ட சம்பவம் சிலாபம், அலாவத்தை போன்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் போன்றே நேற்று இடம்பெற்ற ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவமும் காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் பாராபட்சமின்றி நீதியை வழங்கவேண்டும், போராட்டங்களில் அப்பாவி மக்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தாமலும், ஆளணிகளுக்கு தீங்கு விளைவிக்காமலும் அமைதியான போராட்டத்தை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கொழும்பு காலி முகத்திடல் பகுதிகளில் இளைஞர் யுவதிகள் முன்னெடுக்கும் போராட்டத்தை நான் வரவேற்கின்றேன். அவர்கள் எந்தவொரு கட்சி சார்பாகவோ அமைப்பு சார்பாகவோ கலந்துகொள்ளவில்லை.

எனவே பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறும் எந்தவொரு வன்முறைகளுக்கும் ஆளாகாத வகையில் ஈடுபடுமாறு பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...