ரம்புக்கனை போராட்டம்: ‘குறைந்தபட்ச அதிகாரத்தையே பயன்படுத்த வேண்டியேற்பட்டது’ :பொலிஸ் மா அதிபர்

Date:

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸாருக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ரம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துவெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

30,000 லீற்றர் எரிபொருள் அடங்கிய பௌசருக்கு ஒரு கும்பல் தீ வைப்பதைத் தடுக்க பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும் சேதத்தை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ரம்புக்கனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்ததா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

எரிபொருள் கொண்டு செல்லும் பவுசர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது சேதத்தை ஏற்படுத்தவோ வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...