அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்க்கட்சி கையெழுத்து சேகரிப்பு!

Date:

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சி முன்னெடுத்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வருமாறு விஜித்த ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து சேகரிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆரம்பித்துள்ளது.

இன்று முற்பகல் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

சபையில் இன்று இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க கையொப்பமிட்ட எம்.பி.க்களின் பட்டியல் பின்வருமாறு:

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...

இன்று மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை...

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...