கொழும்பு காலி முகத்திடலில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு: விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு!

Date:

(File Photo)
கொழும்பு காலி முகத்திடலில் இன்று இளைஞர்- யுவதிகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பொலிஸாரால் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்துத் துறையினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காலி முகத்திடலில் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்ளும் தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் இருந்து விசேட பொலிஸ் குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால், பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...