இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து சுயேட்சை எம்.பி.க்கள் இந்திய தூதுவருடன் கலந்துரையாடல்!

Date:

அண்மையில் அரசாங்கத்தைவிட்டு வெளியேறிய தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது நாட்டின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை மக்களுடன் இணைந்து நிற்பதற்காக இந்திய மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியத் தூதுவர் மற்றும் சுயேட்சை எம்.பி.க்கள் இலங்கையின்; தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்து தங்கள் எதிர்கால முன்னோக்கைப் பகிர்ந்து கொண்டனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...