தொடர்ச்சியான எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி வீதியை மறித்து அளுத்கம நகரில் பஸ் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று நண்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
காலி வீதியை பயன்படுத்துவோர் பேருவளை, ஹெட்டிமுல்லை சந்தி ஊடாக அளுத்கமை சென்று காலி வீதியில் பயணத்தை தொடர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் பல பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.