சாய்ந்தமருது குண்டுவெடிப்பு – சடலங்களைத் தோண்டி எடுக்க உத்தரவு!

Date:

கல்முனை- சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி நாளை (27) காலை அம்பாறை பொது மயானத்தில் மரபணு DNA பரிசோதனைக்காக குறித்த உடல் சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பெரியவர்கள், சிறுவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுல் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் என்றழைக்கப்படும் சாரா ஜாஸ்மினின் உடல் உறுப்புகள் DNA பரிசோதனையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனால் உடல் உறுப்புகளை மீண்டும் ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதனடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...